ஜிஎஸ்டி வரி கணக்கீட்டில் ரூ.700 கோடி மோசடி- குஜராத்தை சேர்ந்த 5 பேர் கைது

ஜிஎஸ்டி வரி கணக்கீட்டில் ரூ.700 கோடி மோசடி- குஜராத்தை சேர்ந்த 5 பேர் கைது

700 கோடி ரூபாய் அளவுக்கு சரக்கு மற்றும் சேவை வரி கடன் மோசடியில் ஈடுபட்டதாக குஜராத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் பயனளிக்கக்கூடிய உள்ளீட்டு வரிக் கடனைத் தவறாகப் பயன்படுத்துவதே சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பரவலான மோசடியாகும்.

தொடக்க காலம் முதலே இதுபோன்ற வழக்குகளை மத்திய மறைமுக வரி வாரியம் கண்டறிந்து வருகிறது.

இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் போலி நிறுவனங்கள் மூலம் போலி விலைப்பட்டியல் வழங்கி 700 கோடி ரூபாய்க்கும் அதிகமான உள்ளீட்டு வரி வரவுகளை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக குஜராத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.