31 வது நாள் யாத்திரை...குறைகளை கேட்டறியும் ராகுல்...!

31 வது நாள் யாத்திரை...குறைகளை கேட்டறியும் ராகுல்...!

பாரத் ஜோடோ யாத்திரையை இன்று தும்கூரில் தொடங்கிய ராகுல் காந்தி, மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்திடும் நோக்கில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குமரி முதல் காஷ்மீர் வரை மக்களை ஒன்றிணைக்கும் “பாரத் ஜோடோ யாத்திரை” என்ற நடைபயணத்தை தொடங்கியுள்ளார்.

இதையும் படிக்க: திமுகவுக்கு அப்போ ஒரு பேச்சு... இப்போ ஒரு பேச்சு...அறிக்கை வெளியிட்ட ஓபிஎஸ்!

அந்தவகையில் தற்போது கர்நாடகாவில் முகாமிட்டுள்ள அவர், 31வது நாள் நடைப்பயணத்தை தும்கூரின் மாயசந்திரா கிராமத்தில் ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். இந்த பயணத்திற்கு இடையே, அங்கு வசிக்கும் நடுத்தர மக்கள் மற்றும் விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறார்.

அப்போது, அவருக்கு வழிநெடுகிலும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்ததோடு, தேசியக்கொடி பிடித்து ஆதரவு தெரிவித்தனர். இந்த நடைபயணமானது பானாசந்திராவில் மாலை நிறைவு பெறவுள்ளது.