அரசுக்கு எதிராக செயல்படும் அதிகாரிகள் டெல்லிக்கு இடமாற்றம்...புதுச்சேரி சபாநாயகர் எச்சரிக்கை!!

அரசுக்கு எதிராக செயல்படும் அதிகாரிகள் டெல்லிக்கு இடமாற்றம்...புதுச்சேரி சபாநாயகர் எச்சரிக்கை!!

புதுச்சேரி அரசுக்கு எதிராக செயல்படும் உயரதிகரிகள் விரைவில் டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்படுவார்கள் என சபாநாயகர் செல்வம் எச்சரித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில், தனது அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய சபாநாயகர் செல்வம், சுதந்திர தினத்தையொட்டி புதுச்சேரி முழுவதும் இல்லந்தோறும் 13, 14, 15 ஆகிய தேதிகளில் கொடியேற்ற வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்களும் அவர்களது தொகுதிகளில் உள்ள வீடிகளில் கொடியேற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், புதுச்சேரி அரசுக்கு எதிராக செயல்படுகின்ற எந்த அதிகாரிகளாக இருந்தாலும் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முதல்வர் எது சொன்னாலும் அதை செயல்படுத்தமால் உள்ள  அதிகாரிகள் யாராக இருந்தாலும், தலைமை செயலாளர் உள்பட அவர்களை டெல்லிக்கு மாற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கண்டித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், கடந்த 2 மாதங்களில் 15 சார்பு செயலாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும், ஒத்துழைக்கும் அதிகாரிகளை கொண்டு பணிகளை சிறப்பாக செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய சட்டப்பேரவை வளாகம் கட்டுவதற்கு ரூ.528 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகு மாதிரி வரைபடம் டெல்லிக்கு அனுப்பப்படும் என சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க || வேண்டாம் பாகுபாடு, சாதிப்போம் ஒன்றுபட்டு...தஞ்சை மக்கள் ஒருமைப்பாடு உறுதிமொழி!!