பதக்கம் வென்ற வீரருக்கு சால்வை மரியாதை செய்த குமரி மக்கள்...

பதக்கம் வென்ற வீரருக்கு சால்வை மரியாதை செய்த குமரி மக்கள்...

கன்னியாகுமரி | நாகர்கோவில் அடுத்த இடலாக்குடி அருகே வெள்ளடிச்சிவிளையை சேர்ந்த அஸ்லாம் என்ற இளைஞர், மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்கபாத்தில் நடந்த தேசிய அளவிலான பளு. தூக்கும் போட்டியில் பங்கேற்றார்.

இவர் பெஞ்ச் பிரஸ் பிரிவில் 142.5 கிலோ எடையை தூக்கி ஜூனியர் பிரிவில் மூன்றாம் இடம் பெற்றார். தேசிய அளவிலான போட்டியில் மூன்றாவது இடம் பிடித்து பதக்கமும் பரிசு பெற்ற அஸ்லாம், இன்று ரயில் மூலம் நாகர்கோவில் வந்தார்.

இன்று வந்தடைந்த அவரை, முஸ்லிம் ஜமாத் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சால்வைகள் அணிவித்து வரவேற்று பாராட்டி கெளரவித்தனர். தேசியளவில் பெருமை சேர்த்தவருக்கு பாராட்டுகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பத்திரிக்கையாளர்களை சந்தித்த புரட்சியாளர் ‘சே’ குவேரா மகள்...