பி.எஃப். கணக்கில் கை வைத்த அதிகாரிகள்... ரூ.37 கோடி ஆட்டையை போட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட்...

மும்பையில், ஊழியர்களின் பி.எப். பணத்தில் இருந்து 37 கோடி ரூபாய் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பி.எஃப். கணக்கில் கை வைத்த அதிகாரிகள்... ரூ.37 கோடி ஆட்டையை போட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட்...

மும்பை, காண்டிவலி பகுதியில் பிராந்திய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அலுவலக ஊழியர்களாலேயே தொழிலாளர் வைப்பு நிநிதியில் இருந்து 37 கோடி ரூபாய் சட்டவிரோதமாக திருடப்பட்டுள்ள சம்பவம் தற்போது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இது தொடர்பாக 4 அதிகாரிகள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் காண்டிவலி பகுதியிலுள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குகளை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தொழிலாளர்களால் நீண்ட நாட்களுக்கு உரிமை கோரப்படாமல் நிலுவையில் தேங்கி கிடந்த கணக்குகளில் இருந்து ஒரு பகுதியை போலி உரிமை கோரல்கள் மூலம் ஊழியர்கள் திருடியிருப்பது  தெரியவந்துள்ளது.

இது குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் தொழிலாளர் வைப்பு நிதி உரிமை கோரல்களை கடுமையாக்கி இத்தகைய கொள்ளைகளை தடுப்பதற்கான வழிவகைகளை  ஆராய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.