300 தெருநாய்கள் விஷ ஊசி போட்டு படுகொலை!

ஆந்திராவில், 300 தெருநாய்கள் விஷ ஊசிப்போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

300 தெருநாய்கள் விஷ ஊசி போட்டு படுகொலை!

ஆந்திராவில், 300 தெருநாய்கள் விஷ ஊசிப்போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு கோதாவரி மாவட்டம், லிங்கபாலம் கிராம பகுதியில் உள்ள குழியில், அழுகிய நிலையில் தெருநாய்களின் சடலங்கள் கிடப்பதாக அண்மையில் விலங்கியல் நல ஆர்வலர் ஒருவர் காவல்துறைக்கு புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், கிராம மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த தெருநாய்களை பஞ்சாயத்து தலைவர் பிடிக்க உத்தரவு பிறப்பித்திருந்தது தெரியவந்தது. அதுமட்டுமல்லாது, அவைகளை விஷ ஊசிப்போட்டு கொலை செய்யவும் அறிவுறுத்தியிருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பஞ்சாயத்து ஊழியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.