இரவு நேர ஊரடங்கு அமல்... கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை...

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பெங்களூருவில் இரவு நேர ஊரடங்கு அமல்

இரவு நேர ஊரடங்கு அமல்... கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை...

பெங்களூருவில் இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பெங்களூருவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே அமலில் இருந்த ஊரடங்கு நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.

இந்த நிலையில் பெங்களூரு காவல் ஆணையர் கமல்பந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், வரும் 25-ந் தேதி வரை இந்த இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும், இரவு நேர ஊரடங்கை மீறி தேவையின்றி வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.