தான் டீ விற்ற ரயில்நிலையத்தை, தானே திறந்து வைக்கும் மோடி.! 

தான் டீ விற்ற ரயில்நிலையத்தை, தானே திறந்து வைக்கும் மோடி.! 

சிறுவயதில் மோடி டீ விற்ற ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதை காணொலி மூலமாக அவரே திறந்து வைக்க உள்ளார். 

சிறுவயதில் டீ விற்றதாக பல மேடைகளில் பிரதமர் மோடி கூறியுள்ளார். அதிலும் குறிப்பாக குஜராத்தின் மேற்கு பகுதியில் உள்ள வாட்நகரில் உள்ள ரயில் நிலையத்தில் டீ விற்றுள்ளதாக கூறியுள்ளார். இந்நிலையில் அந்த ரயில் நிலையம் எட்டரை கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு பாரம்பரிய தோற்றம் அளிக்கப்பட்டுள்ளது. இதை இன்று காணொலி மூலமாக பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். அதோடு குஜராத்தில் பல்வேறு மேம்பாட்டு ரயில் திட்டபணிகளை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..