காங்கிரஸ் தலைவர் தேர்தல் பிரசாரத்தை துவங்கிய கார்கே...!

காங்கிரஸ் தலைவர் தேர்தல் பிரசாரத்தை துவங்கிய கார்கே...!

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட மூத்த தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தன்னிடம் மன்றாடி கேட்டுக் கொண்டதாக மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார் ...

மல்லிகார்ஜூன கார்கே:

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த கார்கே, காந்தி பிறந்த நாளான இன்று, தனது பிரச்சாரத்தை முறைப்படி தொடங்குவதாகத் தெரிவித்தார்,

இதையும் படிக்க: மின்துறையை தனியாராக்குவதற்கு துடிக்கும் அரசு... ஆனால் எதிர்க்கும் ஊழியர்கள்...இடையில் பாதிக்கும் மக்கள்!

மேலும் காங்கிரசின் ஒரு நபர் ஒரு பதவி கொள்கைக்கு ஏற்ப, தனது மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் கூறினார். மேலும் தான் ஒரு தலித் தலைவராக இல்லாமல் ஒரு கட்சியின் தலைவராக தேர்தலில் போட்டியிடுவதாகவும் தெரிவித்தார். காங்கிரசின் மூத்த தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடுமாறு தன்னிடம் மன்றாடி கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.