ரயில் நிலையங்களில் பான்மசாலா, வெற்றிலை எச்சிலை அகற்ற இத்தனை நூறு கோடி செலவா?  அதிர்ச்சி தகவல்...

புகையிலை மற்றும் வெற்றிலை எச்சில் கறையை அகற்ற ரயில்வே நிர்வாகம் ஆண்டுக்கு ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவு செய்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ரயில் நிலையங்களில் பான்மசாலா, வெற்றிலை எச்சிலை அகற்ற இத்தனை நூறு கோடி செலவா?  அதிர்ச்சி தகவல்...

இந்திய ரயில் நிலையங்களில்  பான், குட்கா, வெற்றிலை மற்றும் புகையிலை பயன்படுத்துபவர்கள், ரயில் நிலைய வளாகத்தில் துப்புவதால் ஏற்படும் கறைகள் மற்றும் அடையாளங்களை சுத்தம் செய்வதற்காக மட்டும் ரயில்வே துறைக்கு பல கோடி லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு 1,200 கோடி ரூபாய் ரயில்வேத்துறைக்கு செலவாகிறது.

 இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சி ஒன்றை ரயில்வே மேற்கொண்டுள்ளது. கையளவில் உள்ள பிரத்யேக காகித பாக்கெட் ஒன்று ரயில் நிலையங்களில் விற்கப்படவுள்ளது. பான் மசாலா, வெற்றிலை எச்சில் துப்பும் பழக்கம் உள்ளவர்கள் இதை வாங்கி பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிட முடியும். எளிதில் மங்கிவிடும் பொருளால் இது செய்யப்பட்டுள்ளதால் சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு இல்லை என கூறப்படுகிறது. 5 முதல் 10 ரூபாய்க்குள் இருக்கும் இந்த பாக்கெட்டை 15 முதல் 20 முறை வரை கூட பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.

3 வடிவங்களில் பை கிடைக்கும். இதை முதற்கட்டமாக வதற்கு மேற்கு மத்திய ரயில்வே மண்டலங்களில் 42 ரயில் நிலையங்களில் இயந்திரங்கள் மூலம் விற்க திட்டமிடப்பட்டுள்ளது.