திருப்பதியில் கோடை விடுமுறை முடிந்தும் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!

திருப்பதி மலையப்ப சுவாமி கோயிலில் கோடை விடுமுறை முடிந்தும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

திருப்பதியில் கோடை விடுமுறை முடிந்தும் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!

ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற திருப்பதி மலையப்ப சுவாமியை ஒவ்வொரு நாளும் லட்சகணக்கான மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்தநிலையில், பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியான நிலையில் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற பெற்றோர்களுடன் வந்திருப்பதால் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரித்துள்ளது.

இதனால் இலவச தரிசனத்திற்கு சுமார் 20 மணி நேரம் வரை காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர். பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பினால் இன்று முதல் 3 நாட்களுக்கு விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் கூட்டம் காரணமாக லட்டு தட்டுப்பாடு இருப்பதால்  பக்தர்களுக்கு 2 லட்டு மட்டுமே வழங்கப்படும் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.