இந்தியாவில் ஒரே நாளில் 40 லட்சம் சிறார்களுக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டது...

நாடு முழுவதும் சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி, முதல் நாளிலேயே 40 லட்சத்திற்கும் மேல் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 40 லட்சம்  சிறார்களுக்கு மேல்  தடுப்பூசி செலுத்தப்பட்டது...

இந்தியாவில் குழந்தைகளுக்கு கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணி தொடங்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த 25-ந் தேதியன்று பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரை ஆற்றினார். அப்போது பேசிய அவர் கொரோனா பரவலை தடுக்க 15 முதல் 18 வயது வரையுள்ள சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 3-ந்தேதி தொடங்குகிறது என அறிவித்திருந்தார்.

அதன்படி நேற்று சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் தொடங்கியது. நாட்டில் 3-வது அலை பரவலுக்கு மத்தியில் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்றது. 

முதல் நாளான நேற்று 40 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா தெரிவித்துள்ளார்.  15-18 வயது வரம்பிலான அனைவருக்கும் கோவேக்சின் தடுப்பூசி போட மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.