”நான் இன்று இறப்பதைப் போல ஷாருக்கும் இறக்க வேண்டும்” சிறுமியின் மரண வாக்குமூலம்!!

”நான் இன்று இறப்பதைப் போல ஷாருக்கும் இறக்க வேண்டும்” சிறுமியின் மரண வாக்குமூலம்!!

ஷாருக் உசேனால் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தீ வைத்து எரிக்கப்பட்ட ஜார்கண்ட் மாநில சிறுமி அங்கிதா குமாரி சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.  இப்போது, ​​​​இறந்த சிறுமியின் சிகிச்சை மற்றும் மரண வாக்குமூலம் அடங்கிய இரண்டு வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

தாக்குதலுக்கு ஒரு இரவு முன்னரே ஷாருக் ஹுசைன் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவரை மிரட்டியதாக கூறியுள்ளார். , உடனடியாக அதைத் தன் தந்தைக்குத் தெரிவித்ததாக கூறியுள்ளார் அங்கிதா. இரவு நேரமாகிவிட்டதால், தந்தை அவளை தூங்கச் சொன்னதாகவும் அடுத்த நாள் காலையில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை குறித்து முடிவு செய்யலாம் என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

அதிகாலை 4 மணியளவில் அங்கிதா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது ஷாருக்கும் அவரது நண்பரும் அறையின் ஜன்னலில் இருந்து பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததாக அங்கிதா அவரது மரண வாக்குமூலத்தில் கூறியுள்ளார். 

வீடியோவின் முடிவில் அங்கிதா ஷாருக் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் எனக் கூறி முடித்துள்ளார். இறப்பதற்கு முன்பு ”நான் இன்று இறப்பதைப் போல ஷாருக்கும் இறக்க வேண்டும்”எனக் கூறி இறந்துள்ளார் அங்கிதா.

அங்கிதாவை மிரட்டும்போது “எங்களை சிறையில் அடைக்க யார் துணிகிறார்கள் என்று பார்ப்போம், சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு அவர்களை விடமாட்டோம்” என ஷாருக்கின் சகோதரர் அவரை வெளிப்படையாக மிரட்டியதையும் அங்கிதா கூறியுள்ளார். 

ஜார்கண்டில் உள்ள தும்காவில் அங்கிதா மீது பயங்கர  தாக்குதல் நடந்தது.  அவரது பக்கத்து வீட்டுக்காரரான ஷாருக் அவரை தினமும் துன்புறுத்துவதாக அங்கிதா காவல்துறையிடம் கூறியிருந்தார். ஷாருக் தினமும் அவரோடு நட்பு பாராட்டும்படி அங்கிதாவை மிரட்டி வந்துள்ளார். அங்கிதாவின் தொலைபேசி எண்ணையும் பெற்றுகொண்டு தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளதாக தெரிகிறது. அங்கிதா அவரை கண்டித்தபோது, ​​கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் தெரிகிறது.

இதையும் படிக்க: வகுப்பறைகளாக மாற்றப்பட்ட கழிவறைகள்....!!!!! டெல்லியில் தொடரும் ஊழல் குற்றசாட்டுகள்....!!