இந்தியா முழுவதும் உயர்ந்த ஒமிக்ரான் பாதிப்பு... இதுவரை 83 பேருக்கு தொற்று உறுதி...

கர்நாடகாவில் மேலும் 5 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியா முழுவதும் உயர்ந்த ஒமிக்ரான் பாதிப்பு... இதுவரை 83 பேருக்கு தொற்று உறுதி...

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை ஒமிக்ரான் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் மருத்துவர் உள்பட 2 பேருக்கு முதன் முதலில் ஒமிக்ரான் கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து மகராஷ்டிரா, ராஜஸ்தான், டெல்லி பல மாநிலங்களிலும் ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் டெல்லியில் நேற்று மேலும் 4 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 40 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 38 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு ஒமிக்ரான் இருக்கிறதா? என்பதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 4 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதன்மூலம் டெல்லியில் ஒமிக்ரான் பாதிப்பு 10 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஒருவர் மட்டும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். மற்றவர்கள் மருத்துவமனையில் சிறப்பு வசதிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை கர்நாடக மாநிலத்தில் மேலும் 5 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாநிலத்தில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் ஒமிக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.