” முரட்டு எருமையா இருக்கே” எருமை மாட்டுக்கு பயந்து மரத்தில் தூங்கி வரும் குடும்பம்!!!
குஜாராத் மாநிலத்தில் எருமை மாட்டுக்கு பயந்து ஒரு குடும்பம் மரத்திலே உறங்கி வரும் சம்பவம் பெரும் பரபரபை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் வதோரா மாவட்டத்திலுள்ள தப்கா கிராமத்தில் முரண்டு பிடித்து சுற்றித்திரியும் எருமை மாடு ஒன்று கடந்த சில நாட்களாக மனிதர்களை கண்டாலே முட்டி விடுகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் 4 நபர்கள் இந்த எருமை மாடு முட்டி படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் அந்த கிராமத்தில் உள்ள்ள மக்கள் கடும் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.இதனால் பயந்து போன அக்கிராமத்தில் உள்ள ஒரு குடும்பம், இரவு நேரத்தில் எருமை மாடு நம்மையும் வந்து முட்டி விடுமோ என்ற அச்சத்தில். மரத்தில் கட்டிலை கட்டி அதில்தான் உறங்கி வருகின்றனர்.
கணவன், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இரவானால் மரத்தில் ஏறி விடுகின்றனர். உறங்கி எழுந்த பிறகு, காலையில் கீழே இறங்கி தங்களின் அன்றாட வேலைகளில் ஈடுபடுகின்றனர். மீண்டும் இரவு ஆனால் மரம் ஏறி தூங்கி வரும் சம்பவம் நடந்துவருகின்றனர்.