”இந்தியாவை இந்து நாடாக மாற்ற கொலையும் செய்வோம்” பாஜக தலைவர்கள் முன்னிலையில் சபதம் எடுத்த சாமியர்கள்...

இந்தியாவை இந்து நாடாக மாற்றுவோம், அதற்காக கொலையும் செய்வோம் என பாஜக தலைவர்கள் பங்கேற்ற சாமியார் மாநாட்டில் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

”இந்தியாவை இந்து நாடாக மாற்ற கொலையும் செய்வோம்” பாஜக தலைவர்கள் முன்னிலையில் சபதம் எடுத்த சாமியர்கள்...

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் தர்ம சன்சத் என்ற இந்து அமைப்பு கடந்த 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை 3 நாள் மாநாட்டை நடத்தினர். இதில் ஏராளமான அமைப்புகளை சேர்ந்தவர்கள் பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் இறுதி நாளில் எடுக்கப்பட்ட உறுதிமொழியை இந்தியாவை இந்துக்களின் நாடாக மாற்றுவோம் அதற்காக கொலையும் செய்வோம் என்று அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இந்த காட்சிகள் யூடியூப் தளத்தில் நேரலை செய்யப்பட்டதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாநாட்டில் இந்தியாவை இந்து நாடாக மாற்றுவோம். இந்துகளுக்கு மட்டுமான நாடாக உருவாக்குவோம்.இதற்காக சண்டையிடுவோம். செத்துமடிவோம். தேவைப்பட்டால் கொலையும் செய்வோம்.எதற்காகவும் அஞ்ச மாட்டோம். எந்த தியாகத்தையும் செய்யவும் தயங்க மாட்டோம்.நமது முன்னோர்கள், ஆசிரியர்கள், பாரதமாதா ஆகியோர் நமக்கு சக்தியை தருவார்கள் என மாநாட்டில் பங்கேற்றவர்கள் உறுதிமொழி ஏற்றுகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் ராஜேஷ், பாஜக தலைவர் அஸ்வினி உபாத்யாயா, பாஜக மகளிர் அணி தலைவி உதித்தா தியாகி உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் எதிர்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.