புதுச்சேரி சென்ற சொகுசு கப்பலுக்கு அனுமதி மறுப்பு...! ஏன் தெரியுமா..?

புதுச்சேரி சென்ற சொகுசு கப்பலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கடலோர காவல் படையினர் கப்பலை திருப்பி அனுப்பினர்.

புதுச்சேரி சென்ற சொகுசு கப்பலுக்கு அனுமதி மறுப்பு...! ஏன் தெரியுமா..?

சென்னையில் இருந்து சனிக்கிழமை புறப்பட்ட சொகுசு கப்பல் விசாகப்பட்டினம் சென்று அங்கிருந்து புதுச்சேரிக்கு சென்றது. கப்பலில் சூதாட்டம் நடைபெறுவதால் அனுமதி வழங்கப்படவில்லை என்றும், கலாச்சாரத்தை சீர்குலைக்கும் வகையில் நடைபெறும் எந்த விஷயத்தையும் புதுச்சேரியில் அனுமதிக்க முடியாது எனவும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

மேலும், புதுச்சேரியில் கப்பலை அனுமதிக்கக்கூடாது என காங்கிரஸ், அதிமுக மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், புதுச்சேரிக்கு வந்தடைந்த சொகுசு கப்பலுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனைதொடர்ந்து அந்த சொகுசு கப்பலை கடலோர காவல் படையினர் மீண்டும் திருப்பி அனுப்பினர்.