பிரதமர் பதவிக்கான போட்டியில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இல்லை?
பிரதமர் பதவிக்கான போட்டியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இல்லை என அவரது கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் பதவிக்கான போட்டியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இல்லை என அவரது கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான பா.ஜ.க.- ஜேடியூ கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக பெரும்பான்மை இடங்களைப் பெற்ற போதும் நிதிஷ்குமார் முதல்வராக தொடர்ந்து வருகிறார். கூட்டணிக்குள் சலசலப்புகள் ஏற்பட்டுள்ளதால் பாஜக மீது நிதிஷ்குமார் அதிருப்தியில் உள்ளார். இந்த நிலையில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் கேசி தியாகி, பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு பிரதமராகும் அனைத்து தகுதிகளும் உள்ளதாக கூறினார். இருந்தபோதிலும் பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதால் மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்பதாகவும், பிரதமர் பதவிக்கான போட்டியில் நிதிஷ்குமார் இல்லை எனவும் தெரிவித்தார்.