கர்நாடகா : இளம்பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட பாஜக நிர்வாகி அதிரடி கைது...!

கர்நாடகா : இளம்பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட பாஜக நிர்வாகி அதிரடி கைது...!

கர்நாடகாவில் பல இளம் பெண்களுடன் வீடியோ கால் மூலமாக அந்தரங்க புகைப்படங்களை எடுத்து அந்த வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த பாஜக மாணவரமைப்பு நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகா மாநிலம் சிவமோகா மாவட்டம் தீர்த்தஹல்லி தாலுக்காவை சேர்ந்தவர் பிரதீப் கவுடா. இவர் பாஜக மாணவர் அமைப்பின் நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சில கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களுடன் வீடியோ காலில் பேசியும், பாலியல் உறவில் ஈடுபட்டு அதை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக எடுத்து வைத்துள்ளார். 

அண்மையில் அவர் பல பெண்களுடன் நெருக்கமாக இருந்த அந்தரங்க வீடியோக்களை பல்வேறு சமூக வலைதளங்களில் பாஜக நிர்வாகி பிரதீப் கவுடா வெளியிட்டுள்ளார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவப்பட்டதையடுத்து நேற்று காவல்துறை சுயமாக வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த பிரதீக் கவுடாவை கைது செய்துள்ளனர்.

இதையும் படிக்க : ”மணிப்பூர் போல தமிழ்நாட்டில் கலவரத்தை உண்டாக்க திட்டமிட்டனர்” சபாநாயகர் குற்றச்சாட்டு!

பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் இருந்து, இவரது செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பல முக்கிய பொருட்களை காவல்துறை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மூலமாக இவர் எத்தனை பெண்களிடம் மோசடியில் ஈடப்பட்டுள்ளா,ர் மேலும் இந்த வீடியோக்களை வைத்து பெண்களை மிரட்டி பணம் பறித்து வந்தாரா என்று பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே, பாஜக மாணவர் அமைப்பு நிர்வாகிக்கு பத்துக்கும் மேற்பட்ட பெண்களுடன் அந்தரங்க தொடர்பு இருந்து வந்துள்ளதாகவும், இவர் பெண்களை ஏமாற்றி அவர்களுடன் இவ்வாறான தொடர்பை ஏற்படுத்தி வந்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவரால் பாதிக்கப்பட்ட பெண்களின் பட்டியலை எடுத்து அவர்களிடம் ரகசியமாக விசாரணை நடத்தி இவரது மோசடி செயல்கள் குறித்து பல தகவல்களை பெற காவல்துறை அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.