மும்பையில் பாஜக தலைவர் மீது தாக்குதல்.. தொண்டர்கள் பந்த்ரா காவல்நிலையம் முன் ஆர்ப்பாட்டம்

மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் பாஜக தலைவர் கிரித் சோமையா மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து  பாஜக தொண்டர்கள் பந்த்ரா காவல்நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மும்பையில் பாஜக தலைவர் மீது  தாக்குதல்.. தொண்டர்கள் பந்த்ரா காவல்நிலையம் முன் ஆர்ப்பாட்டம்

மகாராஷ்ட்ரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வீட்டின் முன் அனுமன் சாலிசா பாடப்போவதாக தெரிவித்த எம்.பி.யும் நடிகையுமான நவ்நீத் ராணா, எம்எல்ஏ ரவி ராணா ஆகியோர் மும்பையில் கைது செய்யப்பட்டனர்.

அனுமன் சாலிசா பாடப்போவதாக வெளிவந்த அறிவிப்பை திரும்ப பெற்ற பிறகும் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே கர் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அவர்களை பார்க்கச் சென்ற பாஜக தலைவர் கிரித் சோமையா கார் மீது சிவசேனா தொண்டர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

உத்தவ் தாக்கரே கொலைமிரட்டல் விடுப்பதாக மும்பையில் உள்ள கார் காவல்நிலையத்தில் இருவரும் புகாரளித்த நிலையில் அந்தப் புகார் மீது காவல்துறை இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே சிவசேனா தொண்டர்களின் தாக்குதலுக்கு பாஜக தலைவரும் அம்மாநில முன்னாள் முதலமைச்ச்ருமான  தேவேந்திர பட்னாவிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.