3 நாள் போலீஸ் காவலில் ஆஷிஷ் மிஸ்ரா - ரிசர்வ போலீஸ் காவலுக்கு மாற்றம்...

லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள அஷிஸ் மிஸ்ரா, ரிசர்வ போலீஸ் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

3 நாள் போலீஸ் காவலில் ஆஷிஷ் மிஸ்ரா - ரிசர்வ போலீஸ் காவலுக்கு மாற்றம்...

உத்திர பிரதேச மாநிலம் லக்கிம்பூர்  சம்பவத்தில் மத்திய இணையமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ரா காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான நிலையில் 12 மணி நேர விசாரணைக்கு பின் கைது செய்யப்பட்டார். இதையடுத்து லக்கிம்பூர் செஷ்ன்ஸ் நீதிமன்றத்தில் ஆஷிஷ் மிஸ்ரா நேற்று ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், ஆஷிஸ் மிஸ்ராவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் தரப்பில் அனுமதி கோரப்பட்ட நிலையில் நிபந்தனைகளுடன் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு  நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் ஆஷிஷ் மிஸ்ரா-வின் 3 நாள் போலீஸ் காவல் இன்று தொடங்கியுள்ளதை யொட்டி அவர், ரிசர்வ் போலீஸ் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.