பாவனி ரெட்டி கணவன் இறந்தது எப்படி? 2-வது கல்யாணம் நடந்ததா? நல்ல பேரு வாங்குவதற்காக டிராமாவா?

பாவனி ரெட்டி கணவன் இறந்தது எப்படி? 2-வது கல்யாணம் நடந்ததா? நல்ல பேரு வாங்குவதற்காக டிராமாவா?

தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ரியாலிட்டி ஷோ ஒன்றில் நடிகை பாவனி தனது வாழ்கையில் நடந்த விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது முதல் கணவருடன் நடந்த சம்பவங்கள் குறித்து மட்டுமே பேசிய அவர் இரண்டாவது திருமணம் செய்தாரா? அல்லது செய்யப்போகிறாரா என்பது குறித்து பேசவில்லை எனவே ஏன் திருமணம் செய்துகொண்டதை மறைக்கிறீர்கள் என அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சென்னையை சேர்ந்த தனக்கு நடிப்பில் ஆர்வம் இருந்ததால் பேப்பர் விளம்பரம் பார்த்து போன் செய்த போது அவர்கள் எடுத்துக்கொண்டு ஆடிஷனுக்கு வர சொன்னார்கள். நான் பாஸ்போர்ட் போட்டோ எடுத்துக்கொண்டு போனேன். அங்கு போனால் ஸ்டுடியோவில் முழு அளவு போட்டோ எடுத்து வர சொன்னார்கள். ஸ்டுடியோவுக்கு போனேன், அங்கு அவர்கள் முதலில் என்னை நடிப்பு பயிற்சிக்கு போக சொன்னார்கள். 

அதனால் நான் grooming இன்ஸ்டிடியூட் சென்று நடிப்பு பயிற்சி எடுத்துக்கொண்டேன். அதன் பின் படங்கள் சீரியல் என வாழ்க்கை போய்க்கொண்டு இருந்தது. அப்போது தான் காதல் வாழ்க்கை தொடங்கியது. தனது பெற்றோரிடம் சொன்ன போது அவர்கள் ஏற்காததால் நாங்கள் தனியாக வந்து வாழ்க்கையை தொடங்கினோம்… மகிழ்ச்சியாக தான் தங்களது குடும்ப வாழ்க்கை சென்றது… 

அப்போது தனக்கு அண்ணன் போல் இருந்த அவரது பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் பார்ட்டிகொடுத்தோம். அங்கு தனது கணவர் அதிகம் குடித்துவிட்டார். பின்னர் போதையில் காரை எடுத்துக்கொண்டு வெளியே சென்றதை தடுத்தேன் அதை கேட்காமல் வெளியே சென்றதால் வீட்டிற்கு வந்ததும் சண்டையிட்டேன்… பின்னர் என்ன நினைத்தார் என தெரியவில்லை. சேலையால் தூக்குமாட்டி இறந்ததை மறுநாள் காலையில் தான் அறிந்தேன். பின்னர் இரு வீட்டாருக்கும் தகவல் கொடுத்தேன். பின்னர் போலீசார் வந்து விசாரனை மேற்கொண்டனர். 

அவ்வளவு தான் தன்னை பலருடன் தொடர்புபடுத்தி செய்திகள் பரவின என கண்ணீருடன் சொன்னார். எனினும் எனக்கு என் கணவரின் குடும்பம் தான் ஆறுதலாக இருந்தது. என் மாமியார் என்னுடன் அன்பாக இருந்தார். அந்த நேரத்தில் அவர்கள் இடத்தில் நான் இருந்திருந்தால் கூட கோபம் வந்திருக்கும். இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முயற்சித்தும் முடியாததால்  வாழ்க்கை முழுவதும் தனியாக தான் இருக்க வேண்டும் என நினைத்ததாக கூறினார் பாவனி ரெட்டி… 

ஆனால் பாவனி ரெட்டி தனது முன்னாள் கணவரின் நண்பர் ஆனந்தை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார் எனவும், ரியாலிட்டி ஷோவில் நல்ல பெயர் வாங்குவதற்காக அதனை பொதுவெளியில் மறைக்கிறார் எனவும் ரசிகர்கள் அவரை சமூகவலைதளங்களில் சாடி வருகின்றனர்… எது எப்படியோ…பவானி ரெட்டி இரண்டாவது திருமணம் செய்துகொண்டாரா என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.