விஜய் மக்கள் இயக்கத்திற்கு ஆட்டோ சின்னம் ஒதுக்க மறுப்பு தெரிவித்த தேர்தல் ஆணையம்!!

விஜய் மக்கள் இயக்கத்திற்கு ஆட்டோ சின்னம் ஒதுக்க மறுப்பு தெரிவித்த தேர்தல் ஆணையம்!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்துக்கு ஆட்டோ சின்னம்  ஒதுக்க மாநில தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் களமிறங்குகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தேர்தலில் போட்டியிடுவது குறித்து விஜய் மக்கள் இயக்கத்தினர் இன்று ஆலோசனை நடத்தினர். சென்னை, பனையூரில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. 

இதனிடையே, நகர்புற உள்ளாட்சி தேர்தலில்  ஆட்டோ சின்னம் ஒதுக்குமாறு விஜய் மக்கள் இயக்கம் தரப்பில் மாநில தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்தால் மட்டுமே சின்னம் ஒதுக்க முடியும் என மாநில தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.