தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்.. காவல் ஆணையருக்கு வீடியோ அனுப்பிய சூர்யா தேவி

டிக்டாக் பிரபலம் சூர்யா தேவி தற்கொலை செய்து கொள்வதாக கூறி, காவல் ஆணையருக்கு வீடியோ அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்.. காவல் ஆணையருக்கு வீடியோ அனுப்பிய சூர்யா தேவி

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் வசிக்கும் சூர்யா தேவி, திரைப்பட நடிகர்கள் மற்றும் சமூக வலைத்தள பிரபலங்களை கடுமையாக திட்டி வீடியோ வெளியிட்டு பிரபலமானவர். 

இந்நிலையில் அவர் கடந்த சில வாரங்களுக்கு முன், ரவுடிபேபி சூர்யாவின் ஆண் நண்பரான சிக்கந்தர் என்பவரை காலணியால் அடித்து அதை வீடியோவாக வெளியிட்டிருந்தார். 

இந்நிலையில் சூர்யாதேவி மீது மதுரை போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், சூர்யா தேவி தலைமறைவானார். இன்று மதுரை காவல்துறை ஆணையருக்கு தற்கொலை செய்து கொள்வதாக கூறி, வீடியோ அனுப்பியுள்ளார். 

இதனால் உடனடியாக அப்பகுதிக்கு வந்த போலீசார், சூர்யாதேவி நாடகமாடியதை அறிந்து கொண்டு, அறிவுரை கூறி, உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.