டிக்கெட் எடுத்து கொடுத்து படம் பார்க்க வைக்கும் சிம்பு ரசிகர்கள்... ரோகினி தியேட்டர் சம்பவம் எதிரொலி...

டிக்கெட் எடுத்து கொடுத்து படம் பார்க்க வைக்கும் சிம்பு ரசிகர்கள்... ரோகினி தியேட்டர் சம்பவம் எதிரொலி...

தஞ்சையில் சிம்பு ரசிகர் மன்றத்தினர் நரிக்குறவர் சமூக மக்களுக்கு டிக்கட் எடுத்து கொடுத்து பத்துதல திரைப்படம் பார்க்க வைத்தனர்.

சென்னை ரோகினி திரையரங்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்த பத்துதல திரைப்படம் பார்க்க வந்த நரிக்குறவர் சமூக மக்களை திரையரங்க நிர்வாகம் அனுமதி மறுத்து வெளியேற்றினர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி வந்த நிலையில், தஞ்சை விஜயா திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கும் சிம்புவின் பத்துதல திரைப்படத்தை பார்க்க  மாவட்ட சிம்பு ரசிகர் மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.  நரிக்குறவர் சமூக மக்கள் 11 பேருக்கு பால்கனி வகுப்பில் டிக்கெட் எடுத்து கொடுத்து படம் பார்க்க வைத்தனர். சாதி மதங்களை கடந்தவர் சிம்பு என்றும் அவரின் அறிவுறுத்தல் படி நரிக்குறவர் சமூக மக்களை படம் பார்க்க அழைத்து சென்றதாகவும்  சிம்பு ரசிகர்கள் தெரிவித்தனர்.