இனி உங்களை தான் நம்புவேன்....  அல்லு அர்ஜூனிடம் தஞ்சம் புகுந்த சமந்தா

இனி உங்களை தான் நம்புவேன்....  அல்லு அர்ஜூனிடம் தஞ்சம் புகுந்த சமந்தா

இந்த வருடம் அதிக அளவில் விமர்சனத்திற்கு உள்ளான தென்னிந்திய நடிகை என்றால் அது சமந்தா தான் பேமிலி மேன் சீரிஸில் தொடங்கி தனிப்பட்ட பேமிலி பிரச்சனை வரை பல சிக்கல்களை சந்தித்துவிட்டார் சமந்தா. 

நாகா சைதன்யாவுடனான இவரது விவாகரத்து பல சர்ச்சைகளை எழுப்பியது. ஆமிர்கானின் பேச்சை கேட்டுத்தான் சமந்தாவை இவர் விவாகரத்து செய்ததாக ட்விட்டரில் கங்கனா ரணாவத் பதிவிட்டிருந்தார்.

இதனிடையில் மற்றொரு தரப்பினர் சமந்தாவிற்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் விருப்பம் இல்லை முன்னதாக ஒருமுறை கருவையும் கலைத்துள்ளார். இதனால் இவர்களின் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது என்றும் கிசுகிசுத்து வந்தனர், ஆனால் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்த நாக சைதன்யா சமந்தாவை குத்திக்காட்டுவது போல எந்த வகையான கதாபாத்திரங்களையும் நான் ஏற்று நடிப்பேன் ஆனால் எனக்கும் என் குடும்பத்தினருக்கு சங்கடம் ஏற்படுத்தும் பேரை கெடுக்கும் கதாபாத்திரங்களில் நான் நடிக்கமாட்டேன் என்று தெரிவித்திருந்தார்.

உடனே அனைவரும் சமந்தா சூப்பர் டீலக்ஸில் மற்றும் பேமிலி மேனில் ஏற்று நடித்த கதாபாத்திரமும் வருங்காலத்தில் இருபாலின ஈர்ப்புவுடைய பெண்ணாக ஹோலிவுட்டில் நடிக்க இருக்கும் கதாபாத்திரங்கள் இவை அனைத்தையும் மனதில் வைத்துக்கொண்டு தான் இப்படி ஒரு வாக்கியத்தை கூறியுள்ளார் நாகசைதன்யா என்று இணையம் முழுக்க கிசுகிசுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் ஒற்றை குத்து பாடலான ஊ அண்டாவா பாடலுக்கு இதுவரை இல்லாதது போல் தான் கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கி மிகவும் தாராளமாக திறந்த மனதுடன் அதிகளவில் கவர்ச்சியை காட்டி நடனமாடியிருந்தார் சமந்தா.

அந்த பாடலில் இருந்த கவர்ச்சியை தாண்டி ஒட்டுமொத்த ஆண்களும் அலைபவர்கள் என்ற அதன் வரிகள் தான் மிகவும் சர்ச்சையை கிளப்பியது. இந்த பாட்டுக்கு தடைவிதிக்க சொல்லி பலர் போராட்டங்களை எல்லாம் நடத்தினார்கள். ஆனால் இவற்றை எல்லாம் தாண்டி உலகமெங்கும் பட்டைய கிளப்பிக் கொண்டு இருக்கிறது. இந்த பாடல் நேரடி தமிழ்த் திரைப்படப் பாடல்கள் அளவிற்கு ஒரு மாற்று மொழி படத்தின் பாடலை ரசிகர்கள் விரும்பி கேட்டு கொண்டிருப்பது அதிசயம் தான்.

யூடியூபில் வெளியான இரண்டு வாரங்களில் 3 கோடி பார்வைகளைக் கடந்து. தெலுங்கில் 100 மில்லியன் பார்வைகளை இப்பாடல் நெருங்கி வருகிறது. இப்பாடலை பார்ப்பதற்காகவே திரையரங்குகிற்கு ரசிகர்கள் கூட்டம் படையெடுத்து வருகிறது. இதனால் இப்படம்  ₹275 கோடியை இதுவரை வசூலித்துள்ளது என்றும் இனியும் சுமார் ₹325 முதல் ₹350 கோடி வரை வசூலிக்கும் எனவும் தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி கூறியிருந்தார். இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் படத்தில் உழைத்த செட் பாய்ஸ், லைட் மேன் மற்றும் தயாரிப்பு மற்றும் ஆடைக் குழுவினர் போன்ற தொழில்நுட்பவியலாளர்களுக்கு தலா ₹1 லட்சம் அறிவித்து படத்தின் வெற்றி விழாவை கொண்டாடினர்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த வெற்றிவிழாவில் பேசிய அல்லு அர்ஜுன் இந்த பாடல் குறித்து கூறுகையில் “இப்பாடல் மீது முதலில் சமந்தாவுக்கு நம்பிக்கையில்லை. நான் சொன்னதை ஏற்றுக் கொண்டு அவர் நடித்துக் கொடுத்தார். இப்போது பாடல் உலக அளவில் பெரிய ஹிட் ஆகிவிட்டது,” என்றார். அவரது பேச்சைக் குறிப்பிட்டு சமந்தா, ட்விட்டரில்  “இனி எப்போதும் உங்களை நம்புவேன்,” என பதிலளித்துள்ளார். சமந்தாவின் பதிவிற்கு ஹார்ட்டின் எமோஜி பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார் அல்லு அர்ஜுன்.