"பப்பு ரொம்ப choosy” ஐஸ்வர்யாவின் ஆல்பம் சாங்-கை பாராட்டிய நடிகர் பிரபுதேவா...
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருவாக்கி இருக்கும் பாடல் பற்றி பிரபுதேவா பாராட்டி பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை பிரிவதாக அறிவித்த பிறகு தனது கெரியரில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி அவர் ‘பயணி’ என்ற பாடலை இயக்கி இருக்கிறார். இந்த ஆல்பம் பாடல் தமிழ், ஹிந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் கூட இந்த பாடலின் ப்ரோமோ வெளியாகி மக்களிடையே சற்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ப்ரோமோவில் வரும் ஸ்கூட்டரை பார்த்த நெட்டிசன்கள் அது விஐபி படத்தில் வந்த தனுஷ் வண்டி போல இருக்கிறது என கமெண்ட் செய்தனர். என்னதான் தனுஷை பிரிவதாக அறிவித்திருந்தாலும் ஐஸ்வர்யா இன்னும் அவரை மறக்கவில்லை என நெட்டிசன்கள் விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் நடிகர் பிரபுதேவா ஐஸ்வர்யாவை பாராட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், "ஹை பப்பு.. அவர் உங்களுக்கு எல்லாம் ஐஸ்வர்யா, எனக்கு எப்போதுமே பப்பு தான். 9 வருடங்கள் கழித்து ஒரு சிங்கிள் உருவாக்கி இருக்கிறார். இப்போது எல்லாம் சிங்கிள் தான் ட்ரெண்ட். நான்கு மொழிகளில் செய்திருக்கிறார்." "பப்பு ரொம்ப choosy. அவ்வளவு எளிதில் ஒப்புக்கொள்ள மாட்டாங்க. அப்படிப்பட்ட அவர் பண்றாங்க என்றால் கண்டிப்பாக சூப்பராக தான் இருக்கும். டெக்னீஷியன்கள் எல்லாமே பெரிய பெரிய ஆட்கள். அதனால் சூப்பரா இருக்கும். என் வாழ்த்துக்கள்" என பிரபுதேவா கூறி இருக்கிறார்.
அதற்கு ஐஸ்வர்யாவும் ‘’உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றி அண்ணா, நீங்கள் தான் எனக்கு முன்மாதிரி” என்று பதலளித்துள்ளார்.
Thank you so much for all your love always Anna ! You are my inspiration @PDdancing