வித்தியாசமான உடையில் நடிகை சமந்தா...இணையத்தில் வைரல் ...!

நடிகை சமந்தா வித்தியாசமான உடையில் நடத்திய போட்டோ ஷுட்டின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வித்தியாசமான உடையில் நடிகை சமந்தா...இணையத்தில்  வைரல் ...!

கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. ‘பாணாக்காத்தாடி “ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை சமந்தா. இதனைத்தொடர்ந்து, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், தீயா வேலை செய்யனும் குமாரு, 24, அஞ்சான், கத்தி, தெறி போன்ற படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்  பிடித்தார்.

அந்தவகையில்,தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் , சகுந்தலம் ஆகிய படங்களில் நடித்து முடித்து ரீலிசுக்காக காத்திருக்கிறார்.

அவ்வப்போது, படம் நடிப்பதோடு மட்டும் நிறுத்திவிடாமல் விளம்பரங்களில் நடிப்பது, போட்டோ ஷுட் எடுப்பது என்று எல்லாவற்றிலும் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில், தற்போது துபாய் சென்ற நடிகை சமந்தா வித்தியாசமான உடையில் நடத்திய கண்கவர் போட்டோ ஷுட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிடாம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ’டிராவல் லிசுயூர்’ என்ற பக்கத்தை குறித்து(tag) செய்து பதிவிட்டுள்ளார்.

மேலும் ’டிராவல் லிசுயூர்’-வினர் தனது பக்கத்தில் சமந்தாவின் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு, அதில் மிகவும் வெளிப்படையாக பேசும் நடிகை சமந்தாவுடன் எங்களின் கவர் ஷூட்டிற்கு சரியான அமைப்பை உருவாக்குயுள்ளது என்று பெருமையாக குறிப்பிட்டுள்ளார்.    

வித்தியாசமான உடையில் நடிகை சமந்தா நடத்திய போட்டோ ஷுட்டின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.