காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதை புத்தாண்டு தினத்தன்று சூசகமாக தெரிவித்த கணவர்..

காஜல் அகர்வாலின் கணவரான் கவுதம் கிச்லு சமூக வலைதளங்களில் புகைப்படத்தை பதிவிட்டு கர்ப்பமாக இருக்கும் செய்தியை தெரியபடுத்தியுள்ளார்.

காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதை புத்தாண்டு தினத்தன்று சூசகமாக தெரிவித்த கணவர்..

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னனி நடிகையாக வலம்  வரும் நடிகையான காஜல் அகர்வால், 2004 ஆம் ஆண்டு ‘ஹோ கயா நா’ என்ற ஹிந்தி படத்தின் மூலம் அனைவரின் மத்தியில் சினிமாவிற்கு அறிமுகமானார்.அதன் பின் தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தனக்கான இடத்தை தக்க வைத்து கொண்டு ரசிகர்களின் மத்தியில் வரவேற்ப்பை பெற்று வந்தார்.

காஜல் அகர்வால் விஜய்,அஜித்,சூர்யா,தனுஷ் போன்ற பல முன்னனி கதாநாயகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து உள்ளார்.இப்படி சினிமா வாழ்கையில் பிஸியாக இருந்த காஜல் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

காஜல் அகர்வால் கடந்த ஆண்டின் அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி அன்று கவுதம் கிச்லு என்ற நபரை திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவரின் திருமணம் கொண்டாட்டமாக நடைபெற்று சமூக வலைதளங்களில் மக்களின் கவனத்தை பெற்று வந்தது.திருமணத்திற்கு பின்னும் காஜல் படங்களில் நடித்து வருவதாக சொல்லப்பட்டது.தற்போது இவர் உலக நாயகன் கமலஹாசன் அவர்களின் இந்தியன் 2 படத்தில் நடித்து  வருவதாக கூறப்பட்டது.இந்த நிலையில் தற்போது இவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

சமீப நாட்களாக தனது வலைதள பக்கங்களில் காஜல் வெளியிடும் புகை படங்களில் அவரது வயிற்று பகுதி பெரிதாக காணப்படுவதாக அவரது ரசிகர்கள் காஜல் கர்ப்பமாக இருக்கிறார்களா என கேள்விகளை எழுப்பி வந்தனர்.இதற்கிடையில் கணவன் மனைவி இருவரும் கர்ப்பத்தை சூசகமாக உறுதி செய்து இருக்கிறார்கள்.

அவரது கணவர் வெளியிட்ட பதிவில் 2022 ஆம் ஆண்டினை வரவேற்ப்பதாகவும்,அதில் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் ஒன்றையும் சேர்த்து பதிவிட்டுள்ளார்.அதே போல காஜல் அகர்வால் தனது கணவரோடு இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு உள்ளார்.அதிலும் அந்த புகைப்படத்தில் காஜல் அகர்வாலின் கணவர் காஜலின் வயிற்றை பிடித்தபடி இருக்கிறார். இதை எல்லாம் பார்த்து காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதை நெட்டிசன்கள் உறுதி அகர்வால் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இது குறித்து காஜல் அகர்வாலின் தங்கை கூறுகையில் சில சுயநலமான காரணங்களால் அவர் சீக்கிரமே குழந்தை பெற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கிறேன். அவருக்கு திருமணம் ஆன நாளில் இருந்தே நான் இதை தான் சொல்லிக் இருந்தே அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில் தாமதம் காட்டினால் என்னுடைய மகனுக்கு துணை கிடைக்காது. அவனுக்கு இப்போதே 3 வயது ஆகிறது. அதனால் சீக்கிரம் அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.