அல்லு அர்ஜூனின் அடுத்த திரைப்படத்தை இயக்குவது அட்லீயா...? ஷாக்கான ரசிகர்கள்

அல்லு அர்ஜூனின் அடுத்த திரைப்படத்தை இயக்குவது அட்லீயா...? ஷாக்கான ரசிகர்கள்

முதலில்  ஸ்டைலிஸ் ஸ்டாராக இருந்து தற்போது ICON ஸ்டாராக அவதாரம் எடுத்தவர் தான் நடிகர் அல்லு அர்ஜீன். தெலுங்கு சினிமாவில் கொடி கட்டி பறக்கும் அல்லு அர்ஜீன் அடுத்ததாக தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனருடன் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’புஷ்பா’ திரைப்படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்தப் படம் திரையரங்குகளில் மட்டும் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததோடு மட்டுமில்லாமல், ஓடிடியிலும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி ’புஷ்பா’ திரைப்படம் ரிலீஸாகி ஒரு மாதம் ஆன நிலையில், தமிழகத்தில்  மீண்டும் 50 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதனைத்தொடர்ந்து  ’புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகம் மிக விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், அல்லு அர்ஜுனின் அடுத்த படத்தை தமிழின் பிரம்மாண்ட இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.

தமிழில் ’ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ தமிழின் பிரம்மாண்ட இயக்குனரானார். இவர் அடுத்தடுத்து  தளபதி விஜய் நடித்த ’மெர்சல்’ , ‘தெறி’ மற்றும் ’பிகில்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய அட்லி தற்போது ஷாருக்கான் நடித்துவரும் ’கிங்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் அல்லு அர்ஜுன் நடிக்கவிருக்கும் படத்தை இயக்க இருப்பதாக தகவல் கூறுகின்றது.

ஏற்கனவே அட்லீ சொன்ன கதை அல்லு அர்ஜூனுக்கு பிடித்து விட்டதால் அவருடைய அடுத்த பட இயக்குனர் அட்லீ தான் என்று திரையுலக வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்து வருகிறது. அல்லு அர்ஜுனின் ’புஷ்பா’ பான் - இந்தியா திரைப்படமாக வெளியான நிலையில் அட்லியுடன் இணையும் படமும் பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.