நான் ஜிம்மிற்கு செல்ல ஆரம்பித்ததே நாக சைத்தன்யாவை பார்பதற்காகத்தான் : சமந்தா ஓப்பன் டாக்

நான் ஜிம்மிற்கு செல்ல ஆரம்பித்ததே நாக சைத்தன்யாவை பார்பதற்காகத்தான் : சமந்தா ஓப்பன் டாக்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. விண்ணை தாண்டி வருவாயா படத்தில் அறிமுகமான சமந்தா அதன் பின் ஒரு சில படங்களில் நடித்தார், இருந்தாலும் அவ்வளவாக பேசப்படவில்லை. அதன்பின்பு விஜய்யுடன் இணைந்து கத்தி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான சமந்தா தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்க கமிட்டானார்.

விஜய், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்த சமந்தா கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்திலும் நடித்து அசத்தினார். இப்படி தமிழ், தெலுங்கு என இரண்டிலும் கொடிக்கட்டி பறக்கும் நடிகை சமந்தா,  சமீபத்தில் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். அதன் மூலம் அவருக்கு பல பாலிவுட் படவாய்ப்புகள் வருவதாக தெரிகிறது. 

இந்நிலையில் தற்போது சமந்தா நடிப்பில் மிகப்பிரமாண்டமாக உருவாகிவரும் சகுந்தலம் படத்தின் முதல் பார்வை  வெளியிடப்பட்டது.  அந்த முதல்பார்வையின் மூலம் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம்.

என்னதான் படங்களில் பிஸியாக நடித்தாலும் நடிகை சமந்தா தனக்கான நேரத்தை அவ்வப்போது சமூக வலைதளங்களில் செலவிட்டு தான் வருகிறார். இப்படி சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் சமந்தாவிடம் ரசிகர் ஒருவர் பிட்னெஸ் மீது உங்களுக்கு இவ்வளவு ஆர்வம் வர காரணம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பதிலளித்த சமந்தா, நான் உங்களுக்கு மிகப்பெரிய ரகசியத்தை சொல்லப்போகிறேன். என்னவென்றால் நான் ஜிம்மிற்கு செல்ல ஆரம்பித்ததே நாக சைத்தன்யாவை பார்பதற்காகத்தான். அவரால் தான் எனக்கு இந்த பிட்னெஸ் மீது ஆர்வம் வந்தது என்றும் கூறியுள்ளார். சைதன்யா எப்போதும் ஜிம்மிற்கு செல்வதை வழக்கமாக வைத்துகொள்பவர். அவரை தினமும் பார்ப்பதற்காக தான் நானும் ஜிம்மில் சேர்ந்தேன் என ஓப்பனாக நடிகை சமந்தா கூறியுள்ளார்.