புனித் ராஜ்குமாரின் மறைவு செய்தியை கேட்டு துக்கம் தாங்க முடியமால் 3 ரசிகர்கள் உயிரிழப்பு...

நடிகர் புனித் ராஜ்குமார் மறைந்த துக்கம் தாங்க முடியாமல் ரசிகர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புனித் ராஜ்குமாரின் மறைவு செய்தியை கேட்டு துக்கம் தாங்க முடியமால் 3 ரசிகர்கள் உயிரிழப்பு...

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார், நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் புனித் ராஜ்குமாரின் இறப்பு செய்தி கேட்டு ரசிகர்கள் உயிரிழந்து இருக்கிறார்கள்.

கர்நாடகா மாநிலம், பெல்காம் நகரத்தைச் சேர்ந்த 21வயதான ராகுல் புனித் ராஜ்குமாரின்  மறைவு செய்தியை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், இதனால் துக்கம் தாங்க முடியாமல் உயிரை விட துணிஞ்ச ராகுல் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.இதேபோல், புனித் ராஜ்குமார் மறைந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு முனியப்பன், பரசுராம் என்ற ரசிகர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.