பலமுறை கேட்டும் ஜாதிச்சான்று அளிக்காத நிர்வாகம்....! படிப்பை தொடர முடியாததால் மாணவி எடுத்த விபரீத முடிவு..! 

பலமுறை கேட்டும் ஜாதிச்சான்று அளிக்காத நிர்வாகம்....! படிப்பை தொடர முடியாததால் மாணவி எடுத்த விபரீத முடிவு..! 

ஜாதி சான்று இல்லாததால் கல்லூரி படிப்பை தொடர முடியாத மாணவி பூச்சி மருந்து குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியனார். 

திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலை எடப்பாளையம் எம்ஜிஆர் நகர் பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக 30 குடும்பங்களை சேர்ந்த 80 நபர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் பிரதான தொழில் பன்றி வளர்த்து அதனை விற்பனை செய்வதாகும்.

இந்நிலையில் எடப்பாளையம் எம்ஜிஆர் நகர் பகுதியில் வசிக்கும் சரோஜா என்பவரது மகள் ராஜேஸ்வரி நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பில் 375 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரியில் கல்லூரி படிப்பை தொடர விண்ணப்பம் செய்திருந்தார்.

ஆனால் அனைத்து கல்லூரியிலும் ஜாதி சான்று கேட்டதால் மாணவியால் கல்லூரி படிப்பை தொடர இயலவில்லை. இதனால் மனமுடைந்த மாணவி பூச்சி மருந்து குடித்து கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

நான்கு நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். பன்னியாண்டி என்ற ஜாதி சான்றிதழ் கேட்டு பலமுறை மனு அளித்தும் மாவட்ட நிர்வாகம் ஜாதி சான்று வழங்காததால் கல்லூரி படிப்பை தொடர முடியாத மாணவி பலியான சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க     | ”சாத்தான்குளம் வழக்கில் இதுவரை நீதிபதி நியமிக்கப்படவில்லை” - கண்ணீர் மல்க தெரிவித்த ஜெயராஜ் மகள் !