” தனியார் ஐடி கம்பெனியால் தமிழ்நாடு இளைஞர்களுக்கு 6 ஆயிரம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பு..!” - அமைச்சர் பி.டி.ஆர்.

” தனியார் ஐடி கம்பெனியால் தமிழ்நாடு இளைஞர்களுக்கு 6 ஆயிரம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பு..!” - அமைச்சர் பி.டி.ஆர்.

தனியார் ஐடி கம்பெனியால் தமிழ்நாடு இளைஞர்களுக்கு 6 ஆயிரம் பேருக்கு மேல் வேலை கிடைக்க உள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

மதுரை, நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தமிழக அரசு ஐடி பூங்காவில் 170 கோடி ரூபாயில் மதிப்பீட்டில் அமைய உள்ள தனியார் ஐடி கம்பெனியை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் தமிழக அரசுக்கு சொந்தமான எல்காட் ஐ டி பூங்கா இயங்கி வருகிறது. இந்த பூங்காவில் பல்வேறு தனியார் ஐடி நிறுவனங்கள் இயங்கி வருகின்றது.

இந்த நிலையில் "பினாக்கள்" என்ற  தனியார் ஐடி கம்பெனியின் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த அடிக்கல் நாட்டு விழாவில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாட்டு மின்னணுக் கழக நிர்வாக இயக்குனர் அணிஸ் சேகர் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி அடிக்கல் நாட்டில் துவங்கி வைத்தனர்.

இந்த விழாவில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார் அப்போது அவர் கூறுகையில் இது போன்ற பல்வேறு ஐ .டி நிறுவனங்களை தமிழக அரசு வரவேற்கிறது என்றும் இந்த பினாக்கள் ஐடி கம்பெனியினால் நமது தமிழக இளைஞர்களுக்கு 6000 பேருக்கு மேல் வேலை கிடைக்க உள்ளது எனவும் இது போன்ற பல ஐடி கம்பெனிகள் நமது தமிழ்நாட்டில் உள்ள மின்னணு பூங்காவில் அமைந்தால் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலையின்மை குறையும் என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவின் மூலம் பினாக்கள் என்ற தனியார் கம்பெனிக்கும் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க   | முதலமைச்சருக்கும், அமைச்சர் உதயநிதிக்கும் அண்ணாமலை சொன்ன அட்வைஸ்...!