தந்தையை கொலை செய்து விட்டு இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்த மகன் கைது!!!

திருச்சி மாநகரம் தென்னூரில் உள்ள சின்னச்சாமி நகரை சேர்ந்தவர் முருகன் (52) இவர் முறுக்கு விற்பனை தொழில் செய்து வருகிறார். இவருடய மகன் விஜய குமார் (26) லோடு மேனாக பணியாற்றி வருகிறார்.

தந்தையை கொலை செய்து விட்டு இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்த மகன் கைது!!!

மது போதைக்கு அடிமையான முருகன் தினந்தோறும் மது அருந்தி விட்டு குடும்பத்தில் உள்ளவர்களை கெட்ட வார்த்தைகளில் திட்டுவது, அடிப்பது என தொடர்ந்து தொந்தரவு வந்துள்ளார். நேற்று இரவும் மது அருந்தி விட்டு அவ்வாறே செய்துள்ளார்.

அப்போது அவருடைய மகன் விஜயக்குமார் தந்தையை கடிந்துள்ளார். விஜயக்குமாரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மகன் தந்தையை திட்டவும் இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அதில் கோபமடைந்த விஜயக்குமார் முருகனை கத்தியால் குத்தி உள்ளார்.

அதில் சம்பவ இடத்திலேயே முருகன் உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயக்குமார், நேற்று இரவு அவர்கள் வீட்டின் அருகில் உள்ள உய்யக்கொண்டான் வாய்க்கால் அருகே தந்தையில் உடலை போட்டு விட்டு காலை தந்தையை தேடுவது போல் நடித்துள்ளார்.

பின், ஆற்றின் அருகே மயங்கி விழுந்து தந்தை இறந்தது போல் அவர் உடலை எடுத்து வந்து வீட்டில் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இது குறித்து தில்லை நகர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் முருகன்  வீட்டிற்கு வந்த காவல் துறையினர் முருகன் மரணம் குறித்து விஜயக்குமாரிடம் விசாரணை செய்ததில் அவர் தந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

அதனையடுத்து முருகனின் உடலை பிரதே பரிசோதனைக்காக காவல் துறையினர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விஜயக்குமாரை காவல் துறையினர் கைது செய்தனர்.