காதல் கணவர் காட்டம்.. மனைவி கிச்சனுக்குள் ஓட்டம்!! நடந்தது என்ன?

குடும்ப  தகராறு காரணமாக காதல் கணவரை உருட்டுக்கட்டையால் அடித்து மனைவி கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதல் கணவர் காட்டம்.. மனைவி கிச்சனுக்குள் ஓட்டம்!! நடந்தது என்ன?

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள அத்தனூர்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி இளமதி, வி.மன்னார்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

மணிகண்டன் தினமும் மது அருந்தி விட்டு, வீட்டிற்கு வந்து தகராறும் செய்வார் என கூறப்படுகிறது. அப்படித்தான் நேற்றும் தகராறு செய்துள்ளார்.. ஒருகட்டத்தில் இளமதியை தாறுமாறாக, அடித்து உதைக்க ஆரம்பித்துவிட்டார்.. வலிபொறுக்க முடியாமல் இளமதி கதறி உள்ளார்

பிறகு பொறுமை இழந்தநிலையில், இளமதி நேராக கிச்சனுக்கு சென்று, ஒருபெரிய உருட்டுக்கட்டையை எடுத்து வந்து மணிகண்டனை பதிலுக்கு தாக்கிவிட்டாராம். இதில், மணிகண்டன் மண்டை உடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த கொலை குறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீசார் டீச்சர் இளமதியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் 2 பேரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும் கல்லூரியில் படிக்கும்போது காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்துக்கொண்டது தெரிய வந்துள்ளது. 

ஆரம்பத்தில் சென்னையில் அரசு பூம்புகார் நிறுவனத்தில்தான் மணிகண்டனுக்கு வேலை கிடைத்திருக்கிறது. ஆனால், அந்த அலுவலகத்தில் சில பிரச்சனை காரணமாக மணிகண்டன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்... இதனால்தான் தினமும் குடிப்பது ஆரம்பமாகி உள்ளது.. அந்த எரிச்சலையும், கோபத்தையும் மனைவி மீது காட்டி வந்துள்ளார்.. நேற்று சாயங்காலம் இந்த தகராறு அத்துமீறவும்தான், இளமதி அவரை அடித்து தாக்கியதாக தெரிகிறது.