அண்ணா பல்கலைக்கழகம்  நிதி இழப்பு மோசடி... "தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை " துணைவேந்தர் கடிதம்!

அண்ணா பல்கலைக்கழகம்  நிதி இழப்பு மோசடி... "தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை " துணைவேந்தர் கடிதம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விடைத்தாள் மறு மதிப்பீட்டு மோசடி தொடர்பாக சூரப்பா விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில், துணைவேந்தர் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என விளக்கமளித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக முறைகேடு புகார்கள்  தொடர்பாக சட்டசபை பொதுக் கணக்கு குழு நேரில் ஆஜராக சூரப்பாவிற்கு அழைப்பு விடுத்து இருந்த நிலையில் தனக்கும் இந்த விவகாரங்கள் குறித்தும் எந்த சம்பந்தமும் இல்லை என சூரப்பா கடிதம் எழுதியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விடைத்தாள் மறு மதிப்பீட்டு மோசடி, சான்றிதழ்களை டிஜிட்டல் மயமாக்குதல், ஆவணங்கள் அச்சடித்தல் உள்ளிட்ட விஷயங்களில் நிதி இழப்பு ஏற்படுத்தியதாக புகார்கள் கிளம்பின.

இது தொடர்பாகவே சூரப்பா விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் இந்த முறைகேடு புகார்கள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக தான் பொறுப்பேற்பதற்கு முன்னர் நடந்தவை என சூரப்பா விளக்கமளித்துள்ளார்.