பழிக்கு பழி: இளைஞர் கொலை வழக்கில் சிறுவன் உட்பட ஐந்து பேர் கைது

ராணிப்பேட்டை அருகே இளைஞர் கொலை வழக்கில் சிறுவன் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பழிக்கு பழி:  இளைஞர் கொலை வழக்கில் சிறுவன் உட்பட ஐந்து பேர் கைது

ராணிப்பேட்டை அருகே இளைஞர் கொலை வழக்கில் சிறுவன் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அரக்கோணம் அடுத்த வடமாம்பாக்கம் கிராமத்தில் கடந்த 25-ம் தேதி  கோதண்டன் என்பவர், மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து அரக்கோணம் நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் அரக்கோணம் அடுத்த காவனூர் அருகே தனியார் நிறுவன பழைய ஊழியர் குடியிருப்பில் பதுங்கியிருந்த ஒரு சிறுவன் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரித்ததில் கடந்த 2014 ம் ஆண்டு முனுசாமி என்பவரை கோதண்டன் வெட்டி கொலை செய்தார் என்றும் அதற்கு பழிவாங்கும் விதமாக  முகேஷ், சுனில், சுப்பிரமணி உள்ளிட்டோருடன் கோதண்டனை கொலை செய்ததாக மனோஜ்குமார் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.