சித்தப்பாவை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர்... மடக்கி பிடித்த போலீசார்! முன்விரோதம் தான் காரணமா..?

சித்தப்பாவை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர் கைது...!

சித்தப்பாவை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர்... மடக்கி பிடித்த போலீசார்! முன்விரோதம் தான் காரணமா..?

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே சித்தப்பாவை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞரை காவல்துறையினா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர் முருகேசன், இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுதா, என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் இவருடைய அண்ணன் தங்கராஜ் குடும்பத்திற்கும் முருகேசன் குடும்பத்திற்கும் முன் விரோதம் இருந்துவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையெடுத்து முருகேசன் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த  முருகேசன் அண்ணன் மகன் சதீஷ், தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால்  முருகேசனை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் முருகேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து சதீஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.