நீதிமன்றத்தில் ஆஜரான நபருக்கு நேர்ந்த சோகம்!

நீதிமன்றத்தில் ஆஜரான நபருக்கு நேர்ந்த சோகம்!

நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வீடு திரும்பிய நபரை ஒரு கும்பல் வெட்டிப்படுகொலை செய்துள்ளது.

கும்பகோணம் திப்பிராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ஓணான் செந்தில். வலங்கைமான் போலீஸ் சரகம் உள்ளிட்ட பகுதிகளில் இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. 

இந்நிலையில் ஒரு வழக்கு தொடர்பாக திருவாரூர் கோர்ட்டில் ஆஜராகி விட்டு குடவாசல் செல்லூர் நாகலூர் வழியாக காரில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். வக்கீல்கள் அகிலன், பாரதிராஜா ஆகியோர் உடனிருந்தனர். 

அப்போது எதிரே வந்த காரிலிருந்தவர்கள் இவரது காரை மோதி நிறுத்தி காரிலிருந்த செந்தில்குமாரை சரமாரியாக வெட்டினர். அதை தடுத்த வக்கீல் அகிலனுக்கும் தலையில் அரிவாள் வெட்டு விழுந்தது. 

இந்த தாக்குதலில் செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த அகிலனை வக்கீல் பாரதிராஜா மற்றும் அருகிலிருந்தோர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நீதிமன்றத்தில் ஆஜரான பிரபல ரவுடி வெட்டிப் படுகொலை… 5 பேர் கொண்ட கும்பல்  வெறிச்செயல் ; பட்டப்பகலில் பயங்கரம்..!! - Update News 360

தகவலறிந்த குடவாசல் போலீசார் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கொலைக்குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இதையும் படிக்க:"கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக திருமாவளவனை நியமிக்காதது ஏன்? " ஜெயக்குமார் கேள்வி!