15 லட்சம் பணம் கட்டியிருந்தால் உயிரை காப்பாற்றியிருக்கலாம்...தனியார் மருத்துவரின் அலட்சிய பதிலால் கொந்தழித்த உறவினர்கள்

15 லட்சம் பணம் கட்டியிருந்தால் உயிரை காப்பாற்றியிருக்கலாம்...தனியார் மருத்துவரின் அலட்சிய பதிலால் கொந்தழித்த உறவினர்கள்

தாம்பரத்தில் தனியார் மருத்துவரின் அலட்சியத்தால், இருதய நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த திருவள்ளுர் தெருவை சேர்ந்தவர் பாபு. இருதய நோயால் பாதிக்கப்பட்ட இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும், 15 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்துமாறு மருத்துவமனை நிர்வாகம்  கூறியதாக தெரிகிறது.

ஆனால் பணம்  கட்டாததால் ,  வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர் கூறியுள்ளார். இந்நிலையில், பாபு திடீரென மரணமடைந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். .