வீட்டில் தனியாக இருந்த சிறுவர்களை ஏமாற்றி பீரோவில் இருந்த நகையை திருடிய கொள்ளையன்...

சென்னை ஆவடி அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுவர்களை ஏமாற்றி பீரோவில் இருந்த நகைகளை மர்ம நபர் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில்  தனியாக இருந்த சிறுவர்களை ஏமாற்றி பீரோவில் இருந்த நகையை திருடிய கொள்ளையன்...

திருமுல்லைவாயல், கணபதி நகரை சேர்ந்தவர்கள் லோகநாதன், புஷ்பலதா தம்பதி. இவர்களுக்கு 11 வயது மணிகண்டன் மற்றும் 9 வயது மோனிஷ் ஆகிய குழந்தைகள் உள்ளனர். லோகநாதன், புஷ்பலதா ஆகிய இருவரும் வேலைக்கு சென்று விட்ட நிலையில் குழந்தைகள் இருவரும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். இதனையறிந்த மர்ம நபர் ஒருவர் வீட்டினுள் நுழைந்து குழந்தைகளிடம் பெற்றோர் தடுப்பூசி போட்டுவிட்டனரா என கேட்டு, ஆதார் கார்டை காண்பிக்கும்படி கூறியுள்ளார்.

இதனையடுத்து குழந்தைகள் பீரோவில் இருந்த ஆதார் கார்டுகளை எடுத்து காண்பித்த நிலையில் அங்கிருந்த 4 சவரன்  நகைகளை திருடிவிட்டு குழந்தைகளை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு கொள்ளையனை தேடி வருகின்றனர்.