பெற்ற குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற தாய்: ஆரணியில் பயங்கரம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இரண்டு குழந்தைகளை கிணற்றில் வீசி தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெற்ற குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற தாய்: ஆரணியில் பயங்கரம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இரண்டு குழந்தைகளை கிணற்றில் வீசி தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆரணி அடுத்த பெரிய அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அருள்ராஜ் - புஷ்பலதா தம்பதிக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில், ஒரு வயதில் மகளும், இரண்டு வயதில் மகளும் இருந்தனர்.

கடந்த சில நாட்களாக புஷ்பலதாவுக்கும், அவரது கணவர் மற்றும் மாமியார் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று தகராறு முற்றவே, மனமுடைந்த புஷ்பலதா, தனது இரு குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு, கிராமத்திற்கு ஒதுக்குப்புறமாக உள்ள கிணற்றில் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து 2 குழந்தைகளையும் கிணற்றில் வீசி உள்ளார்.கிணற்றில் விழுத இரண்டு குழந்தைகளும் நீரில் மூழ்கி பலியாகினர்.

ஆனால் தாய் புஷ்பலதா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ளாமல், குழந்தைகளை பார்த்துக் கொண்டே கிணற்றின் கரையோரத்தில் உள்ள மரத்தை பிடித்துக்கொண்டு இருந்துள்ளார். அதிகாலையில், அப்பகுதியில் மக்கள் வருவதை கண்ட புஷ்பலதா தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்வதாக கூறி கொண்டு குதித்துள்ளார்.  இதைக் கண்ட மக்கள், புஷ்பலதாவை காப்பாற்றியதுடன், நீரில் மிதந்து கொண்டிருந்த குழந்தைகளின் சடலங்களையும் மீட்டனர். இதுகுறித்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கண்டமங்கலம் காவல் நிலைய போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.