வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்த ஜோடி...ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டிய பெண்ணின் தந்தை..!

வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்த ஜோடி...ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டிய பெண்ணின் தந்தை..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்துகொண்ட  தம்பதியை பெண்ணின் தந்தை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

காதல் திருமணம் செய்த தம்பதி:

கோவில்பட்டி அருகே வீரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குட்டி. லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வரும் இவருக்கு, ரேஸ்மா என்ற மகள் உள்ளார். ரேஸ்மா கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் இவர் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி மாணிக்கராஜ் என்பவரை காதலித்துள்ளார். ஆனால், இவர்களது காதலுக்கு பெண்ணின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் விட்டின் எதிர்ப்பையும் மீறி கடந்த மாதம் காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர்.  

காதல் தம்பதியை வெட்டிய தந்தை:
 
வீட்டை எதிர்த்து திருமணம் செய்துக்கொண்ட தம்பதியர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினர். இந்நிலையில், தம்பதியின் வீட்டிற்கு வந்த பெண்ணின் தந்தை இருவரையும் அரிவாளல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினார். இதில் படுகாயமடைந்த தம்பதி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.   

தேடுதல் பணியில் போலீசார்:

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த எட்டயபுரம் போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, தம்பதியை அரிவாளால் வெட்டிய பெண்ணின் தந்தை மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய முத்துக்குட்டியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.