தாய்க்காக அண்ணனை பலி கொடுத்த தம்பி...!

தாய்க்காக அண்ணனை பலி கொடுத்த தம்பி...!

கோபிசெட்டி பாளையம் அருகே குடிபோதையில் தாயை அரிவாளால் வெட்ட வந்த அண்ணனை, அதே அரிவாளால் வெட்டிக்கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி பகுதியை சேர்ந்த குப்புசாமி என்பவருக்கு சதீஸ்குமார் மற்றும் நகுலன் என்ற இரு மகன்கள் உள்ளனர். கூலித்தொழிலாளியான குப்புசாமி 5 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன்பிறகு தனது தாயுடன் சேர்ந்து இரு சகோதரர்களும் வாழ்ந்து வருகிறார்கள். 

இதனிடையே, குடிப்பழக்கத்தில் சிக்கிய சதீஸ்குமார் போதையில் கிராமத்தில் உள்ள பலரிடமும் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் குடிபோதையில் வீட்டிற்கு வந்த சதீஸ்குமார், தாயிடம் தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் தகராறு முற்றவே, தாயை அரிவாளால் சதீஷ்குமார் வெட்ட சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த தம்பி நகுலன் அதனை தடுத்து நிறுத்தி, அதே அரிவாளால் அண்ணன் சதீஷ்குமாரை வெட்டினார்.  

இதையும் படிக்க : பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளே பள்ளிக்கு சீல்...திருச்சியில் மாணவர்கள் கவலை!

இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த சதீஸ்குமார், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த கவுந்தப்பாடி போலீசார், அண்ணனை வெட்டிக்கொன்ற தம்பியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருப்பினும், குடிபோதையில் தகராறு செய்த அண்ணனை தம்பியே அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.