கெட்டு போன கேக்கா தர.. இந்தா வாங்கிக்கோ.. பேக்கரி உரிமையாளருக்கு பளார் என அறை விட்ட நபர்.. சிசிடிவி காட்சிகள்!!

புதுச்சேரியில் கெட்டுப்போன கேக்கை கொடுத்த பேக்கரி உரிமையாளரை வாடிக்கையாளர் ஒருவர் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கெட்டு போன கேக்கா தர.. இந்தா வாங்கிக்கோ.. பேக்கரி உரிமையாளருக்கு பளார் என அறை விட்ட நபர்.. சிசிடிவி காட்சிகள்!!

கொம்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜீவன் அதே பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது கடைக்கு வந்த பிரகாஷ் என்பவர் கேக் வாங்கி சென்றுள்ளார். அவர் வீட்டிற்கு சென்று பார்த்த போது கேக் கெட்டு போய் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் தனது நண்பர் சக்திவேலுடன் கடைக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு ராஜீவனை தாக்கியுள்ளார். இந்த காட்சிகள் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.