மாமியாரின் திருமணம் கடந்த உறவு... கண்டித்த மருமகனுக்கு நேர்ந்த சோகம்!!

மாமியாரின் திருமணம் கடந்த உறவு... கண்டித்த மருமகனுக்கு நேர்ந்த சோகம்!!

புதுச்சேரி அருகே மாமியாரின் கள்ளக்காதலைத் தட்டிக் கேட்ட இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் குருசுகப்பத்தைச் சேர்ந்தவர்கள். முகுந்தன் - ரம்யா தம்பதி. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இருவரும் ஆரோவில் உள்ள குமரன் நகர் சேரன் வீதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். அதே நேரம் இவர்களது வீட்டின் எதிரே ரம்யாவின் தாயார் கோமதி தனியாக வசித்து வந்துள்ளார்.

முகுந்தன் வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்த்து விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்துள்ளார்.  இந்த நிலையில் முகுந்தனின் மாமியார் கோமதிக்கும், புதுவை பகுதியைச் சேர்ந்த தேவா என்ற இளைஞருக்கும் இடையே திருமணம் கடந்த உறவு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், தேவா, அடிக்கடி கோமதியின் வீட்டுக்கு செல்வதை கவனித்த முகுந்தன், பல முறை எச்சரித்துள்ளார். ஆனால் கோமதியை சந்திப்பதை நிறுத்திக் கொள்ளாமல் காதலை தொடர்ந்துள்ளார் தேவா.  

இதனிடையே, 13-ம் தேதியன்று முகுந்தன், தன் மனைவி ரம்யாவை அழைத்துக் கொண்டு ஜெயிலர் படம் பார்க்க சென்றுள்ளார். படம் பார்த்து முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பியபோது அங்கு கோமதியும், தேவாவும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர்.

இதனால் முகுந்தன், தேவாவை கடுமையாக பேசி அங்கிருந்து விரட்ட முயன்றுள்ளார். ஆனால் தனது காதலை தடுக்க முயன்றதால் கோபமடைந்த தேவா, கத்தியை எடுத்து முகுந்தனை வயிற்றிலும் கழுத்திலும் குத்தி விட்டு தப்பியோடிவிட்டார்.

அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த ரம்யா, தன் கண் முன்பே கணவன் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்தை விரைந்த ஆரோ போலீசார் முகுந்தனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு தப்பியோடிய தேவாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் படிக்க || "தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிட தயாா் " டிகே சிவக்குமாா்!!