14 வயது சிறுமிக்கு பாலியல் வன்முறை...  போக்சோ சட்டத்தில் கல்லூரி மாணவர் கைது...

ஆவடி அருகே வீட்டில் தங்கி இருந்த போது,14வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

14 வயது சிறுமிக்கு பாலியல் வன்முறை...  போக்சோ சட்டத்தில் கல்லூரி மாணவர் கைது...

சென்னை ஆவடியை அடுத்த திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் விக்ரம். இவர் திருநின்றவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவரது அத்தை மகள் 14வயது சிறுமி, 9ம் வகுப்பு படித்து வருகிறார். சமீபத்தில் சிறுமிக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக, விக்ரம் வீட்டில் தங்கி உள்ளார். அப்போது, விக்ரம் இந்த சிறுமியை திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த தகவல் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. இதற்கிடையில், சிறுமியை அழைத்து கொண்டு கோவிலில் வைத்து விக்ரம் திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து, பெற்றோரும் வேறு வழியின்றி வீட்டில் ஏற்று கொண்டனர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமிக்கு வயிறு வலி ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து, சிறுமியை உறவினர்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிறுமியை அழைத்து கொண்டு பரிசோதனைக்கு  சென்றுள்ளனர். அப்போது, சிறுமி கர்ப்பமாகி இருப்பது தெரியவந்தது.

இது குறித்து மருத்துவர்கள் ஆவடி அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் போலீசார் சிறுமியை அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது விக்ரம் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததால், கர்ப்பமாகி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விக்ரமை கைது செய்தனர்.