பெண் மருத்துவர்களுக்கு பாலியல் தொல்லை... அரசு மருத்துவர்கள் இருவர் கைது...

சென்னையில் பெண் மருத்துவர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக அளித்த புகாரின் பேரில் அரசு மருத்துவர்கள் இருவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண் மருத்துவர்களுக்கு பாலியல் தொல்லை... அரசு மருத்துவர்கள் இருவர் கைது...

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்களான வெற்றிசெல்வன், மோகன்ராஜ் மற்றும் இரு பெண் மருத்துவர்கள் கொரோனா காலகட்டத்தில் தி.நகரில் உள்ள விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.

அப்போது பெண் மருத்துவர்கள் இருவரிடமும் மருத்துவர்கள் வெற்றிசெல்வனும், மோகன் ராஜூம் தவறாக நடந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரனிராஜனிடம் முறையிட்டுள்ளனர் பெண் மருத்துவர்கள்.

இதனை அடுத்து தேரனிராஜன் தி.நகர் காவல்துறை துணை ஆணையர் ஹரிகிரன் பிரசாத்திடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில்  மருத்துவர் வெற்றிசெல்வன் மீது கற்பழிப்பு வழக்கும் மருத்துவர் மோகன்ராஜ் மீது பலாத்காரம் வழக்கும் பதிவு செய்தது சென்னை தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வெற்றிசெல்வனையும் மோகன்ராஜையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.