பாத்ரூமில் அடைத்து வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை ....

சென்னை அருகே 12 வயது சிறுமியை கடத்தி வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுனரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

பாத்ரூமில் அடைத்து வைத்து  சிறுமிக்கு பாலியல் தொல்லை ....

திருமுல்லைவாயில் அருகே உள்ள தனியார் எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு 12 வயதில் மகள் ஒருவர் உள்ளார். இதற்கிடையில் நிறுனத்தில் கொடுக்ககூடிய பணியை வீட்டில் இருந்தே செய்து வந்த அவர், சம்பவதன்று வீட்டில் வைத்து தைத்து முடித்த துணிகளை எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் கொடுத்துவருமாறு,  தனது மகளிடம் கூறியுள்ளார்.

தாய் சொல்லை தட்டாத மகள் அவர் சொன்னதுபோல் துணிகளை எடுத்துக்கொண்டு எக்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு சென்றுள்ளார். வெகுநேரமாகியும் சிறுமி வீட்டிற்கு வராததை கண்டு அதிர்ச்சியடைந்த தாய், இச்சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார்,  சிறுமி நடந்து சென்ற இடத்தில் இருந்த கேமிராவை ஆய்வு செய்தனர். அதில் அதேபகுதியை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வரும் குமரேசன் என்பவரது வீட்டிற்கு சிறுமி சென்றது கேமிராவில் பதிவாகியிருந்தது.

இதனைதொடர்ந்து போலீசார் குமரேசனின் வீட்டிற்குள் சென்று சல்லடை போட்டு தேடினர். அப்போது குமரேசன் வீட்டில் இருந்த பாத்ரூமில் சிறுமி அடைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.  சிறுமியை மீட்ட போலீசார் அவளிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் தெருவில் நடந்து சென்ற சிறுமியை குமரேசன் வலுக்கட்டாயமாக தன் வீட்டிற்குள் அழைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும், சிறுமியின் அலறல் சத்தம் கேட்டால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் ஓடி வந்துவிடுவார்கள் என அஞ்சி சிறுமியை பாத்ரூமில் அடைத்து வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதற்கிடையில் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் குமரேசனை கைது செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.